பட்டதாரி: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read
நெல்விளைக்க  விதைவிதைத்துப்   பார்த்தி  ருந்தால்            நெடும்பயிரில்  காய்த்ததெல்லாம்  பதர்கள்  போலகல்வியின்று   வணிகமாக   ஆன  தாலே            காசிருப்போர்   எல்லோரும்   பட்டம்  பெற்றார்எல்லோரும்   பட்டதாரி   ஆன   போதும்            ஏற்றதிறன்   இல்லாத   கார   ணத்தால்நல்லதொரு    பணியவர்க்குக்   கிடைக்க   வில்லை            நாட்டிலவர்   வேலையில்லா   பட்ட   தாரி !தம்குழந்தை    மனநிலையைக்   கேட்டி   டாமல்            தம்குழந்தை   திறன்களினை    அறிந்தி   டாமல்தம்கனவைப்   பெற்றோர்கள்   திணிப்ப   தாலே            தமக்கதிலே   விருப்பம்தான்   இல்லா   போதும்அம்மாக்கள்   கனவுகளைச்   சுமையாய்   ஏற்றே            ஆழ்ந்துமனம்   பதியாமல்   படிப்ப   தாலேசெம்மையான   நுண்ணறிவு   பெற்றி   டாமல்            செல்லாத   பட்டங்கள்   பெறுகின்   றார்கள் !விருப்பங்கள்   அறிந்துகல்வி   புகட்டம்   போதே            வித்துக்கள்   முத்துகளாய்   விளையும்  நன்றாய்தரும்கல்வி   இந்நாட்டை   உயர்த்து   கின்ற            தகுகல்வி   ஆகும்மனம்   ஒன்றிக்  கற்றால்அருங்கல்வி  ஏழையர்க்கும்   கிடைக்கச்   செய்தால்            அறிவாளி   புதைந்திடாமல்   வருவான்   மேலேபெருமையாகும்   பட்டங்கள்   பட்ட   தாரி            பெரும்மாற்றம்   சாதனைகள்    படைத்தே  வெல்வான் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com