பட்டதாரி: ரீகன் • ஜெய்குமார்

Updated on
1 min read

மானிட வாழ்வில் 
ஆயிரம் காயங்கள் 
ஆற்ற மருந்து மலை உச்சியில் 
கனவுகள் வெல்லும் ஒருநாள் 
என்னும் வாய் மொழி வாக்கியத்தை 
எதார்த்தம் சிதைத்து விட்டது 

கல்வெட்டி 
பால் சுமந்து 
நாளிதழ் சுமந்து     
துயில் துறந்து 
காய்ந்த மர மின்வெட்டில் 
கண்களின் இறகை தடவி 
வென்ற பட்டம் 
அலமாரி பெட்டியில் 
அர்த்தமின்றி உறங்குகின்றது   

சிறு வயது பொழுது-போக்கை 
என் பெற்றோர் பாரம் கண்டு  
என் உடல் நோவு தந்தும்  
வலி பொருத்து  
உழைப்பில் செலுத்தி 
விட்டேன்-பட்டம் வெல்ல 

வென்ற பட்டம் இன்றாவது  
பெற்ற வலியை இதமாக்கும் 
என்ற கனவு 
கசந்து விட்டது ஓராயிரம் 
போட்டியில்  

விடாமுயற்சியை என் நரம்பில் 
ஏற்றி வென்று வர பாதை 
போட்டேன், என்ன செய்வது 
என் போல் பல உள்ளம் 
வரிசை நிரம்பி போராடும் 
நியாயம், என் மனதை 
சுட்டுபோட்டது 

மக்கள் தொகை முன்னேற்றம் 
கண்ட பிழையா..?? 
அரசாங்கம் தெளிவில்லா 
பிழையா..?? 
என்ற அரை சிந்திப்பில் 
தேர்ந்த பட்டதோடு 
அடுத்த அலுவலகத்தை தட்டினேன் 
அய்யா நான் வேலை இல்லா 
ஏழை பட்டதாரி வந்திருகின்றேன் 
என்று..!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com