ஆயிரம் கனவுகளை -அடிமனதில் புதைத்துவைத்து ;பட்டம் பெரும் நாளை எண்ணி -பட்டாம் பூச்ச்சாய் பறந்ததென்ன ? சாதித்து விட்ட சந்தோசம் !சலசலப்புக்கு பஞ்சமில்லை !பட்டம் வாங்கும் முன்னே நான் -பகல் கனவில் மூழ்கினேன் ! படிப்புக் கேற்ற வேலை தேடி -பகலெல்லாம் அலைந்ததில் ;பஞ்சம் மட்டும் கூடவர -பரிகசிக்கும் பட்டமே !பட்டதாரி என்று சொல்லி - பரிகசிக்கும் உலகிலே ;பாவப்பட்ட மனிதனாய் -பல்லிளித்து அலைகிறேன் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.