வழி தவறிய பயணங்கள்: கவிஞர் டி.கே.ஹரிஹரன்

Updated on
1 min read
பாதையைத் தொலைத்துவிட்டுப்பயணத்தைத் தொடர்கின்றார்பார்வையை இழந்ததறியாமல்....சுதந்திரத்தைத் தொலைத்துவிட்டுஉரிமையைத் தேடுகின்றார்இருப்பதையும் பறிகொடுத்தபடி....ஆற்றின் வழியெல்லாம்ஆக்கிரமிப்புகளால்ஆற்றின் பயணம் வழிதவறிஊருக்குள் புகுந்துதன் வழிதேடி அலைகிறது.....பிரபஞ்ச வெப்பமும் மாசும்கூடக் கூட......இயற்கையும் வழிதவறிஎங்கெங்கோ அலைந்தபடி..ஆழிப் பேரலையைக் கொணர்கிறது.பூகம்பத்தைப் பிரசவிக்கிறது...ஓஸோனில் ஓட்டைப் போடுகிறது...மழையைக் காணாமல் செய்கிறது...ஒரேயடியாய்ப் பெருமழையாய்ப் பெய்கிறது...வெயிலோ உச்சபட்ச வெப்பத்தில்......மனிதர் மட்டும்வழிதவறியதை அறியாமலேயேஇயற்கையைப் பகைத்தபடிதொடர்கின்றார் பயணத்தை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com