செல்லாக் காசு: கு. கொ. முத்துலிங்கம்

Updated on
1 min read

காசு பணம் துட்டு
என பல பெயர்கள் உண்டு அதற்கு
அது இருக்கும் பலரின் பையில்
அதன் அதிகாரமோ! மத்திய அரசின் கையில்
பாட்டி காலத்து அரையணா காலணா
அஞ்சி பைசா பத்துப் பைசா காசு
சுறுக்குப் பையில் இருக்கும்போதே
ஆனது செல்லாக் காசு
தாத்தா காதுமடலில் இருந்தது
இருபது பைசா காசு சுருட்டுக்காக..
பெட்டிக்கடைக்குப் போவதற்குள்
ஆனது செல்லாக்காசாக..
அப்பா கொடுத்தார் ஐந்து ரூபாய் நோட்டு
பள்ளிக்கூட பரிட்சைக்காக..
இன்றோ! அதுவும்
ஆனது செல்லாக் காசாக..
ஆறு நாள் வேலை பார்த்து
கையில் வாங்கினேன்
ஒரு ஆயிரமும் ஐநூறும் நோட்டாக
பார்த்த ஆசை தீருவதற்குள்
ஆனது செல்லாக் காசாக..
கருப்பு பணத்தை மீட்க வேண்டுமாம்
கார்பரேட்காரனுக்கும்
கழனியில் கால் வயிறு கஞ்சியுடன்
உழைக்கும் விவசாயிக்கும் ஒரே சட்டமா?
'மை' வைத்து சோதனையிடுவது
ஏழைகளை மட்டுமா?
புதிதாக விடும் இரண்டாயிரம்என் பி
ள்ளைக்கு செல்லுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com