வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

எழுத்து: எழில் ஓவியா எழில்

Updated On :3 அக்டோபர் 2016, 11:42 am
உயிர்கொண்டு உலகமதில்உலவிடும் கருத்தாகஉணர்வோடு   செதுக்கிடுநல் எழுத்து !பயிர்போலே விளைச்சலைபகுத்தறிவுத் துணிச்சலுடன்பாரோர்க்குச் சொல்லுவதேஎழுத்து !உயிர்காக்கும் மருந்தாகிஉள்ளூரச்  சுகமாக்கிஉள்ளமதைப் பதமாக்கும்எழுத்து !அயர்வுறும் நீதியினைஅறமாக்கும் மேலானஅரிவாளாய்  இயங்கிடுமேஎழுத்து!நெஞ்சுரமே கொண்டாங்கு  நேர்மையாய்ப் பேசவேநித்தமும்நீ  முத்தமிழைஎழுது !அஞ்சாத கண்கொண்டே அவணியின்ஓலமதைஅறிவிக்கக் கைக்கொண்டுஎழுது !பஞ்சமுடன்  பட்டினியும்தலைவிரித் தாடும்நிலைபார்த்தாங்கு விரட்டிடவேஎழுது !சஞ்சலமி லாதவொரு சரித்திரமது  படைக்கசட்டமது செய்திடவே எழுது !விதியினை மாற்றியே மதியாலேவென்றிடும்வித்தையினைச் சொல்லிடுமே எழுத்து !சதிகாரக் கும்பலைச் சாடிநிதம் சீர்படுத்திச்சான்றோனாய் ஆக்கிடுமுன்எழுத்து !கொதிக்கின்ற மனங்களின்கூச்சல்கள் போக்கிடவேகூர்கொண்ட வாளாகும்எழுத்து !மதிக்கின்ற பெரியோர்தம்மனஞ்சொல்லும் புத்தியினைமறவாமல் நினைவூட்டும்எழுத்து !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.