எழுத்து: மீனா தேவராஜன்

Updated on
1 min read
ஒன்றாய் எழுத்துக்கள் இணைந்தால்சொல்லில் பொருளுண்டுஒன்றிரண்டு எழுத்துகள்தனித்து நின்றாலும்  பொருளுண்டுமற்ற எழுத்துகளுடன் கூடினால்பொருள் ஆழமாகுமாம்சொற்கள் கோர்வையாய் இணைந்தால்அழகு கூடுமாம்சொல் மாலை தொடுத்திடலாம்சொல்லோவியம் வரையலாம்கட்டுரைக்கட்டிடங்கள் கட்டிலாம்காதல் கடிதங்கள் எழுதிடலாம்எழுத்து தனித்து நில்லாதுஓசையுடன் கூடினால் பண் பிறக்கும்பழுதிலா பண்ணிசைபலரையும் கவர்ந்திடுமாம், எழுத்தேஏழுலுகையாளுமன்றோ?எத்தனை சக்தி பிறக்குதடா!எண்ணிப்பார்! எண்ணத்தில்கவிதை பிறக்குதடாகவிதை என்னும் காந்தசக்திகண்டவரையும் மயக்கும்மாயவலை கவிதையுடன்இசை கலந்தால் இன்பம்மயக்கம் ஒருயிர் முதல்ஆறறிவு வரை ஆட்கொளும்மூவின எழுத்துகள்இணைந்திட்டால் முத்தமிழ்மூளும் கனலாய் எழும்இன்பத்தமிழ் பிறக்கும்மனிதன் தனிந்து வாழ்ந்தால் சுகமேது?மனிதன் கட்சி கட்டி நின்றால் இன்பமேது?எத்தனை குலத்தவராய்த் தமிழர் இருந்தாலும்அத்தனை இனத்தவரும் இணைந்தால் நம்தாய்தமிழ்மொழி உலகில் என்றென்றும் வாழும்தமிழ் வாழ  நாமும் வாழ்வோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com