1. அழகான பொம்மைகளை வீட்டினில் கொலுவென அடுக்கினாம் மகிழ்ந்திடலாம், அவைகளை நாட்டின் பொறுப்பினில் அமர்த்திட அவலத்தைக் கண்டிடுவோம் ! வழக்கத்தில் இருந்திட்ட தெல்லாமும் அறிஞரை வாவெனும் நன்னெறிதான், வாழையடி வாழையன இருந்திட்ட இந்தனல் வழக்கத்தை மாற்றிவிட்டோம் ! முழங்கால் சேற்றினில் சிக்கித் தவிக்கிரோம் முன்னேறந் தனையிழந்தோம் , மூடமை தன்னைக் கொண்டிட்டப் பலனென்றே முழுமையாய் இன்றுணர்ந்தோம் ! சழக்கர்கள் விலகட்டும் அறிஞர்கள் ஆளட்டும் சாதனைகள் தொடரட்டும் ; சத்திய நெறிதன்னை என்றென்றும் காத்திட்டு சரித்திரம் படைக்கக்டும் !2. பொம்மைகள் நாடிதை ஆண்டிடக் காண்பதும் பொலிவினை பெற்றிட்டு உய்வுறத் தகுமோ ? எம்மையில் நாமென்ன பாவத்தைச் செயிதோம் இத்தகு ஆட்சியில் வளமையை இழக்க ? நம்மின் தவறே இதற்கெல்லாம் காரணம் நாமிதை உணரா திருந்திடத் தகுமோ ? செம்மையை நாட்டினில் விளைவிக்க வேண்டின் சீர்மிக்க அறிஞரைத் தேர்தல்நம் கடனாம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.