மனம் எனும் மாயப் பேய்: ம. அஹமது நவ்ரோஸ் பேகம் 

Updated on
1 min read

ஆண்டி முதல் அரசன் வரை,
சாமானியன் முதல் சித்தர் வரை 
அனைவரையும் பேதமின்றிப் 
பாடாய்ப் படுத்தும் !

வெப்பமானி, பாரமானி என 
எத்தனையோ கருவிகள் எதை, 
எதையோ அளப்பதற்கு இருந்தாலும்,
மணிக்கு எத்தனை  கிலோமீட்டர் 
வேண்டுமானாலும் ஓடும், பறக்கும், தாவும்  
மனதின் வேகத்தை அளப்பதற்கு
மனிதனால் எந்தக் கருவியையும்
கண்டு பிடிக்கவே முடியாது !  

தீதும், நன்றும் பிறர் தர வாரா 
என்பது மனதிற்கே சொல்லப்பட்டதோ?
தீயன வேண்டாம், அடங்கு 
என்றால் அடங்காது !

நல்லன செய்வதற்கு அஞ்சாதே,  
என்றால் அடங்கும், மனதின் விசித்திரம்
மனிதர்களைப் பாதாளத்தில் தள்ளும்  
மனம் எனும் மாயப் பேயின் தந்திரம் ! 

மனதை அடக்கியோர் ஞானிகளானர். 
அடங்கியோர் நஷ்டமடைந்தனர். 
அறிவு என்னும் கடிவாளம் கொண்டு 
மனம் என்னும் மாயப் பேயை அடக்குவோர்  
ஈருலகிலும் வெற்றி பெறுவர்!

கடிவாளம் தவற விடுவோருக்கு 
எவ்வுலகிலும், என்றுமே தோல்விதான் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com