தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மனம் எனும் மாயப் பேய்: ம. அஹமது நவ்ரோஸ் பேகம் 

Updated On :17 அக்டோபர் 2016, 11:18 am

ஆண்டி முதல் அரசன் வரை,
சாமானியன் முதல் சித்தர் வரை 
அனைவரையும் பேதமின்றிப் 
பாடாய்ப் படுத்தும் !

வெப்பமானி, பாரமானி என 
எத்தனையோ கருவிகள் எதை, 
எதையோ அளப்பதற்கு இருந்தாலும்,
மணிக்கு எத்தனை  கிலோமீட்டர் 
வேண்டுமானாலும் ஓடும், பறக்கும், தாவும்  
மனதின் வேகத்தை அளப்பதற்கு
மனிதனால் எந்தக் கருவியையும்
கண்டு பிடிக்கவே முடியாது !  

தீதும், நன்றும் பிறர் தர வாரா 
என்பது மனதிற்கே சொல்லப்பட்டதோ?
தீயன வேண்டாம், அடங்கு 
என்றால் அடங்காது !

நல்லன செய்வதற்கு அஞ்சாதே,  
என்றால் அடங்கும், மனதின் விசித்திரம்
மனிதர்களைப் பாதாளத்தில் தள்ளும்  
மனம் எனும் மாயப் பேயின் தந்திரம் ! 

மனதை அடக்கியோர் ஞானிகளானர். 
அடங்கியோர் நஷ்டமடைந்தனர். 
அறிவு என்னும் கடிவாளம் கொண்டு 
மனம் என்னும் மாயப் பேயை அடக்குவோர்  
ஈருலகிலும் வெற்றி பெறுவர்!

கடிவாளம் தவற விடுவோருக்கு 
எவ்வுலகிலும், என்றுமே தோல்விதான் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.