‘மனமது செம்மையானால்
மந்திரம் ஜெபிக்க வேண்டாம்’
ஆன்றோர் அமுத மொழி
அனைவரும் உணர வேண்டும் !
மனமது சீர்குலைந்தால்
மக்கள் விரும்பும் அமைதி
மனங்களிலே வாழ்விலே
காணாமலே மறைந்துவிடும் !
மரக்கிளைக்குக் கிளைகுர
ங்கு மட்டுமா தாவும்
மனித மனமும் தாவும்
இனி தாவும் மனதை நிறுத்தி
அமைதி வாழ்வைக் காண்போம் !
மனம் எனும் மாயப்பேய்
மனிதனைப் பிடித்து விட்டால்
குதூகூலக் குடும்பமும்
குட்டிச்சுவராகி விடும் !
நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்
நம் மனம் சொல்லும் வழியிலே
நல்ல மனித மனங்கள் வாழும்
தீய மனதால் மனித வாழ்வு வீழும் !
எண்ணத்தின் பிறப்பிடம் மனம்
ஓர் மனித மனதிலிருந்து
ஓராயிரம் எண்ணங்கள் உதயம்
மனம் வெறுமையாகும்போது
நின்று விடும் மனித இதயம் !
அன்பு மனம் அமைதியான
ஆறுபோல் வளைந்து ஓடும் !
கொதிக்கும் கொடூர எண்ணங்கள்
கொந்தளிக்கும் கடல் அலைகள் !
மனம் எனும் மாயப்பேயை
வீரம் எனும் வேப்பிலை
கொண்டு விரட்டி விட்டு
அமைதியான அன்பு வாழ்வை
இதயத்தில் குடிவைப்போம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா புதிய சாதனை!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

