ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஜன்னல் நிலவு:  கவிஞர்  " இளவல் "  ஹரிஹரன்

Updated On :24 அக்டோபர் 2016, 11:06 am
காதோரம் நரைத்தமுடி வெளிச்சங் காட்டும்
        கண்களின்கீழ் கருவளையம் மேகங் கூட்டும்
தேதிசெல தேதிசெல முதுமை கூடும்
        திசைபார்த்துத் திக்கின்றி அலையும் உள்ளம்
பாதையெலாம் முட்களெனப் பூக்கள் தீட்டும்
        பார்வையிலே முதிர்ந்துவிட்ட கனியைப் போல
ஆதரவாய் முதிர்கன்னிக் கமைந்து விட்ட
        அற்புதந்தான் வீட்டிலுள்ள ஐன்ன லாகும்.
ஜன்னல்வழி தோன்றுகின்ற நிலாவாய்க் காணச்
        சங்கடங்கள் தோன்றுதய்யோ கால வெள்ளப்
பின்னலிலே கரைகின்ற இளமை போகும்
        பேச்சளவில் திருமணத்தின் சுவையும் தீரும்
திண்ணையிலே அமர்ந்தபடி காணும் காட்சி
         தெருநோக்கும் ஜன்னலிலே விரியும் மெள்ள.
முன்னம்கண் கண்டகனா முடிவை நோக்கி
         முன்னேறக் காட்சிகளில் திருப்தி கொள்ளும்.
கைகோர்த்து நடந்துசெல்லும் புதுமண மக்கள்
         கண்பார்த்துக் காதலித்துப் பழகிடும் மக்கள்
மைவிழியால் பேசியபடி மயக்கிடும் மக்கள்
         வாரிசுகளாய் பெற்றெடுத்த குழந்தை மக்கள்
பையநடம் புரிந்தபடி பார்க்கும் போது
         போதாத தட்சணையால் வீட்டில் முடங்கி
கையறுநிலையாகவே வாழ்க்கை ஜன்னல்
         கம்பிகளைத் தேய்த்தபடி தேயும் திங்கள்.                    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.