ஜன்னல் நிலவு:  கவிஞர்  " இளவல் "  ஹரிஹரன்

Updated on
1 min read
காதோரம் நரைத்தமுடி வெளிச்சங் காட்டும்
        கண்களின்கீழ் கருவளையம் மேகங் கூட்டும்
தேதிசெல தேதிசெல முதுமை கூடும்
        திசைபார்த்துத் திக்கின்றி அலையும் உள்ளம்
பாதையெலாம் முட்களெனப் பூக்கள் தீட்டும்
        பார்வையிலே முதிர்ந்துவிட்ட கனியைப் போல
ஆதரவாய் முதிர்கன்னிக் கமைந்து விட்ட
        அற்புதந்தான் வீட்டிலுள்ள ஐன்ன லாகும்.
ஜன்னல்வழி தோன்றுகின்ற நிலாவாய்க் காணச்
        சங்கடங்கள் தோன்றுதய்யோ கால வெள்ளப்
பின்னலிலே கரைகின்ற இளமை போகும்
        பேச்சளவில் திருமணத்தின் சுவையும் தீரும்
திண்ணையிலே அமர்ந்தபடி காணும் காட்சி
         தெருநோக்கும் ஜன்னலிலே விரியும் மெள்ள.
முன்னம்கண் கண்டகனா முடிவை நோக்கி
         முன்னேறக் காட்சிகளில் திருப்தி கொள்ளும்.
கைகோர்த்து நடந்துசெல்லும் புதுமண மக்கள்
         கண்பார்த்துக் காதலித்துப் பழகிடும் மக்கள்
மைவிழியால் பேசியபடி மயக்கிடும் மக்கள்
         வாரிசுகளாய் பெற்றெடுத்த குழந்தை மக்கள்
பையநடம் புரிந்தபடி பார்க்கும் போது
         போதாத தட்சணையால் வீட்டில் முடங்கி
கையறுநிலையாகவே வாழ்க்கை ஜன்னல்
         கம்பிகளைத் தேய்த்தபடி தேயும் திங்கள்.                    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com