ஜன்னல் நிலா: மீனா தேவராஜன்

Updated on
1 min read
நகர்புறம் வாழும் நான் நாகரீகத்தின் உச்சிலென்று
அடைப்பு வீட்டில் அடைந்து கிடக்கிறேன் நான்
ஜன்னல் வழி வான்பரவைப்படகு நிலவைக் கண்டேன்
எப்போதும் நீ அழகுபாரில்நீ உலா செல்ல
என் இளமைக்காலம்மனத்தில் ஊஞ்சலாட
இப்போது நான் அப்போதுபோல் இல்லை 
வெட்டவெளியில் வட்ட நிலாவைக் காணவில்லை
பட்டொளி மரநிழலில் கண்ணாமூச்சி ஆடவில்லை
வீட்டுமுற்றத்தில் உன் அழகில் நான் மயங்கவில்லை
வெள்ளித்தட்டாய் விண்ணில் உன் வலம் கண்டதில்லை
நிலத்தில் நான் இரவில் நடக்குங்கால் வெண்ணிலா
நீள்வானில்   இன்று என்னுடன்  வருகிறதாஎன்று
அண்ணாந்து பார்த்துத் தரையில் வரவில்லை உலா
விண்ணில் உள்ள உன்னை நேரே காண இயலா
விண்ணைத் தொடும் வியன் மதில் புறாக்கூடு
கண்ணுக்கெட்டா உயரத்தில் உள்ளது என்வீடு
முற்றமில்லா மூச்சுமுட்டும் வீட்டில் மாளாப்
பற்றால் பரவெளியில் பார்ப்பதுஜன்னல் நிலா
இற்றை ஜன்னல் நிலாவென்றாலும் நீ வெண்ணிலாவே
அற்றை முற்றத்து நிலாவென்றாலும் நீ விண்ணிலாவே
அன்றும் கண்டதும் அதே நிலா, இன்றும் காண்பதும் அதே நிலா
என்றும் மங்காது உன் அழகே! என்றும் குறையாது உன் ஈர்ப்பே!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com