ஜன்னல் நிலா: ரா.பார்த்தசாரதி 

Updated on
1 min read
பௌணர்மி    நிலவே     வானில்   தவழ்ந்து வருகின்றாய்
எங்கள் காதலுக்கு முகவரி தந்து காட்சியளிக்கின்றாய்
 நான் உன்னைப்  பார்க்கும்போது அவள் என்னை பார்க்கின்றாள்
அவள் என்னை பார்க்கும்போது கருமேகத்திர்க்குள் மறைகின்றாயே !
வீட்டின் ஜன்னல் வழியே  குளிர்ந்த தென்றல் வீசிடும்  
சூரியனும், நிலவும் பகலிரவிலே என்றும் தோன்றிடும் 
சூரியோதயம் புத்துணர்ச்சியும்,நிலவானது குளிர்ச்சியும் தரும் ,
காதலர்களுக்கு  நிலவின் வெளிச்சமே என்றும் மகிழ்ச்சித்தரும் !

எங்கள் காதலோ இருவீட்டு  ஜன்னல் ஓரத்தில் உண்டானது 
நாங்கள் கொஞ்சுமொழி பேச கடற்கரையே தனியிடமானது 
விழியே காதல் கதை பேசி, எங்கள் மனம் அலைபாய்க்கின்றதே 
இரு விழிகளின் நேசமே , எங்கள் காதல்  தேசமானதே !
அத்திக்காய் சென்று என் காதலியை என்றும் காயாதே
என்னை எது வேண்டுமாயின்  செய்  என்கின்றேன் 
அப்பாவைக்காய், மாதுளங்காய் என்றும் நீ காயாதே 
எங்கள் காதல் உறவினை என்றும் பிரிவினைப்படுத்தாதே !
நிலவின் ஒளியை கருமேகங்கள் கட்டியணைத்து முத்தம்மிடும்,
காதலர்களுக்கோ  இருட்டும், இரவும் இன்பத்தை ஊட்டிவிடும் 
நிலவே நீ நினைக்கும் இடத்தில் நாங்கள் இருவரும்மில்லை 
எங்களை நெருங்காதே எனக் கூற  எந்த பயமும்மில்லை !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com