தண்ணீருக்கு இரத்தம்: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read
குருதிநீரா   தண்ணீர்க்குத்   தீர்வாய்  ஆகும்
            குடிப்பதற்கு   இரத்தத்தைக்   கொடுப்போ  ருண்டோ
பெருமையுடன்   பாரதத்தின்  புதல்வ   ரென்று
            பேசுவது  எல்லாமும்   பொய்மை   தானோ
தருவதுவும்   பெறுவதுவும்   இரத்த   லன்று
            தமிழர்தம்   பண்டுதொட்ட   உரிமை  யாகும்
அருவருப்பாய்   உள்ளதிங்கே    நீருக்   காக
            அண்டைமக்கள்   அன்புதனை   புதைப்ப  தெல்லாம் !
காற்றுதனை   அணைகட்டித்   தடுப்போம்   என்றும்
            கதிரவனைத்   திரையிட்டு   மறைப்போம்  என்றும்
சாற்றுகின்ற   மதியிழந்த   மனிதர்   போன்று
            சாற்றுகின்றார்   காவிரியைத்   தாரோ   மென்று
வேற்றுநாட்டு   மக்களாஇத்   தமிழ   ரிங்கே
            வேறுபாட்டை   எதற்காகக்   காட்டு   கின்றார்
நேற்றுவரை   திராவிடத்தின்   இனமாய்   சேர்ந்தே
            நெஞ்சினிலே   இணைந்தொன்றாய்   இருந்தோ   ரன்றோ !
நரபலிகள்   வாகனங்கள்   எரிய   வைத்தல்
            நம்தலையில்   நாம்தீயை   வைத்த   லாகும்
அரசியலை   வெறியுணர்வை  ஒதுக்கி   வைப்போம்
            ஆராய்ந்து   நீதியினை   நிலைக்க   வைப்போம்
அரசுமூன்றும்   ஒன்றமர்ந்து   மாநி   லங்கள்
            ஆறுகட்குப்   பொதுதிட்டம்   வகுக்க   வைப்போம்
நிரந்தரமாய்த்   தீர்வுகாண   நதிகள்   தம்மை
            நீள்நாட்டு   உடைமையென   சட்டம்   செய்வோம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com