மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தண்ணீருக்கு இரத்தம்: வ. மாரிசுப்பிரமணியன்  

Updated On :19 செப்டம்பர் 2016, 9:45 am

அன்று, 
நமது தேசம் காக்க  
இரத்தம் சிந்தினோம் 
அன்று, 
ஆங்கிலேயரை விரட்டிட, 
இரத்தம் சிந்தினோம் 
அன்று, 
அடிமைச்சங்கிலியை 
உடைத்தெறிய இரத்தம் சிந்தினோம் 
ஆனால், இன்று, 
தண்ணீருக்காக இரத்தம்….
வேண்டாம், வேண்டவே வேண்டாம்…

நீர் நீரோடு சேரும் பொழுது….
நீ மட்டும்  சேர  மறுத்து,,,  
நான்,  நீயென பிரிப்பதேன்…
நதிகளை இணைத்திட, 
விதிகளை மாற்றுவோம்
தண்ணீருக்காக இரத்தம் 
என்பதை அகற்றுவோம்…
வீதிகள்தோறும் 
ஒற்றுமை தீபம் ஏற்றுவோம்…
நாம் நாங்கள் என்றேயிருந்து  
நற்பணியாறுவோம்…..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.