வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

 அரியாசனம்:  ரீகன். ஜெயக்குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

அகிலத்தில் தானே 
தோன்றியதோ மனித இனம்??,
தேடிச்செல்லும்,
வழியெல்லாம் ரத்தக்கறை..

அழித்திட்ட உயிரெல்லாம்,
அதிகமாக இருக்கும்போது,
தவறாக இருக்குமோ,
தடயமனைத்தும்..

எப்பொருள் அடைய,
மெய்ப்பொருள் அழித்திட்டாய்,
கண்டுவிட்டாயோ,
காலனின் வழி...

தப்பிக்க வழி அடைத்து,
தடயங்கள் தராமல்,
கெக்கலித்து சிரிப்பது,
யார் இப்போது..

இன்னும் மறக்கவில்லை,
நீ செய்திட்ட தவறுகள்,
இனி மன்னிக்க வழியுமில்லை,
அதற்கினி நேரமுமில்லை..

முடிவுப்பொழுது நெருங்கிவிடின்,
யார் தடுப்பார்,
இயற்கையதின்,
அரியாசனம்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.