வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

நிலாவிடு தூது: பொன்.இராம்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

கருங்கூட்டச் சிப்பி மேகத்திலே
உதித்திட்ட வெண்மதியே!
இமவான் வரைந்த
உலக வரைபடத்தில்
பெண் என்பவள் பெரும் சக்தி!

கருங்கூந்தல் இரசிக்கும்
மனித உள்ளம்
முகக் கருமைதனை
வெறுப்பதும் ஏனோ!

வரதட்சணை நெருப்பினில்
இன்னமும் கருவண்ண
முதிர் கன்னிகள்
மெழுகுவர்த்தியாய்
எரிந்து கொண்டிருக்கின்றனர்!

உனதழகு முழுமதி
வண்ணத்தை பெண்களிடத்தில்
நிரந்தரமாக வரைந்துவிட
பிரமனிடம் தூது  செல்வாயோ!

உனதழகை இரசிக்கத்தானோ
வெண்மல்லிகையும் இரவில்
மணக்கிறது!

மல்லிகைசூடும் கருங்கன்னியரின்
மனம் மகிழ
 வழி வகையும் செய்வாயோ!
வெண்ணிற முகம்
பெறவே  தூது நீயும்
செல்வாயோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.