வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

நிலாவிடும் தூது: ஆபிரகாம் வேளாங்கண்ணி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

காதல் என்பது நிஜம் தான்
ஒருசேர மூதலிப்ப தென்று
அன்றன்றோ மனம் மகிழும்
ஒரு முனையில் ஆதவன்
மறு முனையில் மாது அவள்
நிலாவிடும் தூது நிலவிடும்


கலந்திருந்ததால் சுகமுண்டு
மானிடத்து இனம் பெருகும்
எனக்காய் நீயுமாய் மாறாய்
உனக்காய் நானுமாய் நன்கு
காத்தலிலும் சுகம் உண்டு
நிலாவிடும் தூது இது


கனவில் கண்ட  அவனை
நினைவில் நிரடிக்கொண்டு
சுனையில் புரண்டு தினம்
நித்திரை வேண்டி வெறும்  
மாத்திரை உண்பதினால்
நிழல் நிஜமாகிவிடுமோ
நிலாவிடும் தூது இது


காலம் துணை நில்லும்
ஞாலம் கதை சொல்லும் 
இதயம் வதை தள்ளும்
எண்ணம் நிறைவேறுமோ என்று
கரை சேரும்  அன்றே
பரிகாரம்  நிலாவிடும் தூது


அடங்கி ஒடுங்கி மடங்கி
வாழ்ந்தால் தப்பு இல்லை
நடுங்கி கிடுங்கி பதுங்கிய
வாழ்வோ வாழ்வு இல்லை
மென்மையே பெண்மையே
உண்மையினை உணர்த்து
நிலாவிடும் தூது யோசனை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.