எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 11:38 am

கவிதைமணி

எந்தனுயிர்க் காதலியே!இனியவளே!தூயவளே!பந்துக்குள்  காற்று   பதிந்து    கிடப்பதுபோல்உந்தன் நினைவால் உடற்பந்தில் உயிர்க்காற்றுநின்று   நிலவிடுமே!  நெஞ்சை நிறைத்திடுமே!உன்பார்வை பட்டதுந்தான் உலகம் தெரிந்ததடி!உலகத்துப் பொருள் யாவும் உற்சாகம் பெருக்குதடி!கலகங்கள்  வந்தாலும்  காட்சிகள்   மாறினாலும்உளத்தின் அடியினிலே உன்முகந்தான் பதிந்ததடி!காதலியே நீயும் கண்ணசைத்தால் போதுமடி!உந்தன் விருப்பத்தை ஒன்றும் விட்டிடாமல்என்றும் நிறைவேற்றி இனிமை தொடர்ந்திடவேநின்று நான் செயலாற்றி நெஞ்சை நிமிர்த்திடுவேன்!கட்டளையிடு காதலியே உந்தன் கண்ணசைவால்!நித்திரையைப் போக்கியிங்கு நிம்மதியைக் குலைத்தெடுக்கும்அதிகார வர்க்கத்தை  அநீதியையே  தினம்  செய்யும்அயோக்கியக் கும்பலையும் அடியோடே வேரறுப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.