சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீ கண் சிமிட்டினால்: -பெருமழை விஜய்

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 12:05 pm

கவிதைமணி

இளைஞனே! இனியவனே!
உன் கண் சிமிட்டலுக்காகத்தான்
உலகம் காத்திருக்கிறது!

அன்று...மெரினாவில் நீ...
ஜல்லிக்கட்டு வேண்டி...
இருந்த தவத்தை...
இவ்வுலகமே ரசித்தது!

-ஆம்!அது போராட்டமல்ல!
உயர்ந்த தவம்!
குடியில்லை!கூத்தில்லை!
கொஞ்சும் மங்கையர் அருகிருந்தும்
வரம்பு மீறிய வார்த்தைகள் கூட இல்லை!

அரசியல்வாதிகளின் ஆசைவார்த்தைகளில்
நாங்கள் ஏமாந்ததே நிஜம்!
இனாமாகச் சிலவற்றை...
எங்களுக்குக் கிள்ளிக் கொடுத்துவிட்டு
அவர்கள் அள்ளிச் சென்றதை 
இப்போதல்லவா அறிகிறோம்!

பொருட்களை மட்டுமல்ல...
பொங்கி வந்த காவிரியின்
மணலையுமல்லவா அள்ளிக் காசாக்கி
அடாவடி செய்கிறார்கள்!
அவர்களின் அடிவருடிகளாக
அதிகாரிகளும் ஆகிப் போனதல்லவா
எமது உச்சகட்ட சோகம்!

எல்லோரையும் பார்த்து...
இயலாமையில் தவிக்கின்றோம்!
இளைஞனே! நீதான் எங்கள்
இறுதி இலக்கு!
மாட்டைக் காப்பாற்றிய நீ...
மனிதர்களைக் காப்பாற்ற வா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.