மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

நீ கண் சிமிட்டினால்: உஷா முத்துராமன்

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 12:15 pm

கவிதைமணி

கள்ளமில்லா மழலையே 
நீ கண் சிமிட்டினால் 
உள்ளத்து கவலையெல்லாம் 
மறந்து  பூரிப்பாகுதே!
முதுமையில்  இருக்கும்  தாயே 
பதுமை  போல....
நீ கண் சிமிட்டினால் 
என்னை  தாலாட்டி  வளர்த்த 
காலம்... மனதில்  வர 
ஞாலமே  உற்சாகமாகுதே!
மேகமே....... நீ மின்னல் 
என்ற கண் சிமிட்டினால் 
மழை பொழிந்து நீர்
கொடுப்பாய்  என்று 
எதிர் நோக்கி  மனம் 
உற்சாக ஊஞ்சலில் 
பூரிப்புடன் ஆடுதே!!!
இமைகளை படைத்த கடவுள்
சுமை எதுவும் கண்களுக்கு 
வரக்கூடாதே என்ற 
எச்சரிக்கைக்காகத்தான்!
சிமிட்டும் கண்கள் ஆயிரம் மொழி 
பேசுமே!   இப்படி 
பேசும் கண்கள் நாம் 
இறந்த பின்னும் வாழ.....
சிமிட்டும் கண்களை 
தானம்  செய்வோம்.....
இறந்த பின்னும் வாழுவோம்!  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.