நீ கண் சிமிட்டினால்: சர்வோ சீனிவாசன்


அங்கங்கள் ஐந்தாம்
ஆண்டவன் படைப்பினிலே
திறன்கள் ஐந்தும்
தேவையன்றோ உயிரினங்களுக்கே !
கண்ணுக்கு மட்டும்
கதவினை ஏன் படைத்தான்?
இதயத்தின் துடிப்பினைப்போல்
ஏன் மூடி திறக்கின்றாய் ?
ஆயிரம் வரிகள் கூறா காவியத்தை
ஒரு கண் சிமிட்டல் கூறுமாமே!
பிறந்த சிசுவின் அழகே
அந்த கண்சிட்டலன்றோ!
தாயும் சேயும் பேசுவதே
கண்சிமிட்டலில் தானே!
காதலும் காமமும்
பல்லாங்குழி ஆடுமாமே
ஒரு கண்சிமிட்டையில் !
ஆயிரமாயிரம் பாஷைகள்
ஆயினும் கண் இமை சிமிட்டும்
பாஷை காவியம் படைக்குமன்றோ!
கண்ணும் இமையும் காட்டிய
வித்தையன்றோ உலகத்தையே
பன்முறை பார்க்க தூண்டியது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...