கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தனிமையோடு பேசுங்கள்: கவிதா வாணி 

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 9:57 am

கவிதைமணி

கூச்சலுக்கிடையே நித்தம் 
நிகழும் வாழ்க்கை, 
நான் பெரியவன் நீ பெரியவன்- 
ஒன்றும் தெரியாதவன், 
எல்லாமும் தெரிந்தவனாய் - பாவிப்பவன்
சாதி, சமூக நீதி, அறிந்தவர் - 
அறியாதவர், வறியவர் - 
பெரியவர், நல்லவன் கெட்டவன்
என்று சாட்டையாய் 
சுழற்றி அடிக்கும் கூச்சல், 
கால வெளியெங்கும் கடந்து மிதக்க,
சந்தையில் ஒலிக்கும் 
இரைச்சலுக்கு இடையே - 
விசும்பும் தனிமையின் மெளன ஒலி,
வெற்றியின் வேட்கையிலும்
நேற்றைய கனவுகளிலும்
நிதர்சனமாய் நீர்த்துப் போக
சுயம் மறந்த காயம் நிறைந்த 
தனிமை காத்துக் கொண்டிருக்கிறது -
உண்மையாக உரையாட வரும்
உள்ளத்திற்காக,
அப்போது நிகழும் - 
ஓர் ஆன்மீக அதிசயம், 
பல அகலிகைகளை மீட்டெடுக்கும்
ஹிரண்ய கர்பத்திலிருந்து,
பொன் செய்யும் மருந்தென
மன்னவன் - தரிசனம் -
மெளனமாய் நிகழும் - என்ன?
நிகழ்வுக்கான நேர இடைவெளி -நொடியோ-
யுக மோ? நடத்துபவனே நன்கறிவான்'!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.