கூச்சலுக்கிடையே நித்தம்
நிகழும் வாழ்க்கை,
நான் பெரியவன் நீ பெரியவன்-
ஒன்றும் தெரியாதவன்,
எல்லாமும் தெரிந்தவனாய் - பாவிப்பவன்
சாதி, சமூக நீதி, அறிந்தவர் -
அறியாதவர், வறியவர் -
பெரியவர், நல்லவன் கெட்டவன்
என்று சாட்டையாய்
சுழற்றி அடிக்கும் கூச்சல்,
கால வெளியெங்கும் கடந்து மிதக்க,
சந்தையில் ஒலிக்கும்
இரைச்சலுக்கு இடையே -
விசும்பும் தனிமையின் மெளன ஒலி,
வெற்றியின் வேட்கையிலும்
நேற்றைய கனவுகளிலும்
நிதர்சனமாய் நீர்த்துப் போக
சுயம் மறந்த காயம் நிறைந்த
தனிமை காத்துக் கொண்டிருக்கிறது -
உண்மையாக உரையாட வரும்
உள்ளத்திற்காக,
அப்போது நிகழும் -
ஓர் ஆன்மீக அதிசயம்,
பல அகலிகைகளை மீட்டெடுக்கும்
ஹிரண்ய கர்பத்திலிருந்து,
பொன் செய்யும் மருந்தென
மன்னவன் - தரிசனம் -
மெளனமாய் நிகழும் - என்ன?
நிகழ்வுக்கான நேர இடைவெளி -நொடியோ-
யுக மோ? நடத்துபவனே நன்கறிவான்'!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.