தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தனிமையோடு பேசுங்கள்:   உஷாமுத்துராமன்

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 11:40 am

கவிதைமணி

தனிமை - அது
இனிமையானது
சிந்திக்கக் கிடைத்த "பொற்காலம்"
ஓசையின்றி  அமைதியுடன் 
தனிமையும் சேர்ந்தால்....
சிற்பி  ஒரு சிலை செய்துக்கி பேசுவான்!
கவிஞன்  ஒரு கவிதை எழுதி அதோடு பேசுவான்!
எழுத்தாளன்  ஒரு  கற்பனை 
கதாபாத்திரத்துடன்  பேசுவான் 
கிடைக்கும் எல்லோரும்  தனிமையினை 
எடை போட்டு  நேரத்தை திட்டமிட்டு 
விரும்பியவருடன்  பேசினால்  
தனிமையில் கிடைப்பது  இனிமையே!
இதில்.....
ஊக்கத்துடன் சாதிக்க 
ஏக்கமில்லா  மனதுடன் 
பக்கம் பக்கமாக உள்ளத்துடன்
உற்சாகமாக  பேசுங்கள்!
தனிமையில் பேசினால்  
மூடர்  என்பவர்களின் 
எண்ணத்தை மாற்ற 
திண்ணமான  மனதுடன்  
வண்ணக் கனவுகளை 
பற்றி பேசுங்கள்!
பேசியவர்  சாதிப்பர்....
ஏசியவர்  போதிப்பர்!
பேசுங்கள்!  பேசுங்கள்!
தனிமையோடு  பேசுங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.