தனிமையோடு பேசுங்கள்: கவிஞர் மா.உலகநாதன்


தனிமையோடு பேசத் தான் விழைந்தேன்;
ஆனால்,அது
பேச மறுத்துவிட்டது;
என்னென்று கேட்டேன்?
நட்பு, சுற்றம் என
நாளும் உன்னைப்
பலரும் சூழ்ந்திருக்க,
ஒத்தும் உதவியும்
பலர் போற்ற
வாழவே, உனைப் படைத்தேன்!
அவர்தம் மகிழ்ச்சியிலே
அகமகிழ்தல் யாருக்கும்
கிட்டுவதுண்டோ,சொல்?
ஆனால், கடுகுள்ளம் கொண்டு
நத்தைபோல் உன்னை நீ
சுருக்கிக் கொண்டால்
நானென்ன செய்வது?
நடந்து பார்,நாடெல்லாம் உன் சொந்தம்;
கொடுத்துப் பார்,
குவலயமே குதூகலிக்கும்;
இப் பிறவி வாய்த்த
துனக்கு,இனி
இன்பமே எந்நாளும்
துன்பமில்லை;தனிமையில்லை!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...