எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தனிமையோடு பேசுங்கள்: கோ. மன்றவாணன்

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 10:17 am

கவிதைமணி

தனிமையோடு பேசுங்கள் என்றார் யோகி
என்முகம் பார்த்து

யாருமற்ற பெரும்பரப்பில் 
அமர்ந்திருக்கிறேன்
அலைமோதும் கற்பாறை மீது

வெளியேறிச் சென்று
விசாரிக்கிறது மனது
இறந்தவர்களையும் தோண்டியெடுத்து

கற்சிலை முன் பேசப் பேசக்
காது முளைத்துவிடுகிறது 
கருங்கல் சுவர்களுக்கும் 

நம்பி உள்ளத்தைத் திறக்க முடிவதில்லை
நான்கு திசைகளிலும் வேடர்கள்

எனக்குள்தான் அழுகிறேன்
எட்டிப் பார்க்கிறார்கள் யார்யாரோ...

தனிமை இதுவென்று உடல் நம்பினாலும்
கூட்ட நெரிசல் மனம்முழுவதும்
கூச்சல் இட்டபடி

சவக்குழிக்குள்  என்னைப் புதைத்துக்கொண்டு 
மவுனமாகப் பேசுகிறேன்
மண் அதிர்கிறது 

எதுவுமற்ற மனவெளியில் பேச 
எதிர்பட்ட காட்டுச்செடி கொடிகளை வெட்டி 
இவ்வளவு தொலைவு வந்துவிட்டேன்

கண்டறிகிறேன்
எல்லாம் உண்டு இந்த உலகில்
தனிமையைத் தவிர

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.