

மேகக் கூட்டங்களுடன்
மோதிய முழு மதி
தோற்றுப் போனதால்
இடி விழுமென பயந்த
மும்முனை மின்சாரம்
ஓடி ஒளிந்துகொண்டது
மேகம் சுமந்த நீரை
மெதுவாகப் பொழிந்து
மண்ணுக்குப் பரிசளித்து
மின்னல் விளக்கால்
இருட்டின் அழகை
வெளிச்சமிட்டுக் காட்டியது
அந்த மழை இரவு!
- சு.ஜெயக்குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.