அடைமழை இரவு; அதிலொரு கனவு
எனைமட்டும் உயிராய் நினைந்திடும் உறவு;
தனிமையில் நிலவு; தவித்திடும் பொழுது
துணையென பொழியும் கருணையும் அழகு
குழந்தையின் சிரிப்பாய் குளிர்ந்திடும் மனது
பொழிந்திதும் அழகில் மகிழ்ந்திடும் இரவு
கொடுந்தண லதனில் புழுங்கிடும் பொழுது
கடுங்குளிர் வழங்கும் துளிகளும் இனிது
நெடுந் தனிமைகளைக் களைந்திட விழைந்து
உறவெனப் புகுந்தாய் உயிருக்குள் நுழைந்து
மழை கண்டவுடனே மேகங்கள் கொண்டு
அகம் மறைத்திடுமே முழுமதி விரைந்து
உனைக் கண்டவுடனே விரல்களும் குவிந்து
முகம் மறைத்திடுமே வெட்கத்தில் குனிந்து
பிரிவென்ப தொன்று நிகழ்வதன் கருத்து
உறவென்ப ததனைப் புதுப்பிக்கும் பொருட்டு
மழையொழிந்த பின்னும் ஒளிர்ந்திடும் நிலவாய்
உன் நினைவுகளுடனே நிறைந்திடும் மனது !!!!
- கவிஞர் டாக்டர். இராஜலட்சுமி இராகுல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


