

தூது செல்லும்
மேகத் தோழிகளே ...
சூரியக் காதலன்
உங்கள் காதலை
ஏற்று கொள்ளாததனால் தானோ...
இரவில் மழையை
கண்ணீராய் உகுக்கின்றீர்களோ ...?
இரவின் மழையே ...
நீதான் அற்புதமான பொருள் ...
ஏனென்றால்,
ஒளியை கண்டு எல்லோரும்
மயங்குவது இயல்பு ....
ஆனால் நீ இருளை கண்டு
மயங்கினாயே.....!
வரையா மரபின் மாரி நீதானே...?
மழைக்காலனே...
நீ உன் தூதர்களான
இடி மின்னலுடன்
என்னை கைது செய்து கொண்டு போயேன்...!
- த.தினேஷ், கடலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.