

பிரகாச வெளிச்சம்
அப்போதைக்கப்போது
வந்து போயின
மின்னலின் விளைவால்
.
பிரளய ஒலிகளும்
மிரட்டி போயின
சிறிது சிறிதாக
இடியின் துணையோடு
.
குளுமையின் தாக்கம்
கூடித்தான் இருந்தது
பகலின் வெம்மையை
ஒத்தால்
.
மறுநாள் காலை
குளிர்ச்சியுடன்
தொடங்க ஓர்
நல் தொடக்கம்
.
யாருக்கும் இம்சை
விளைவிக்காத
அகிம்சைவாதியாய்
இரவு மழை.
- இரா.வெங்கடேஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.