மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வாழ்க்கையெனும் போர்க்களம்: கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

Updated On :2 ஜூன் 2018, 1:39 pm
சிந்தனைகள் தொடர்ந்திருக்கும் செயலை எண்ணி   சிதைந்திடாது முடிப்பதற்கு வழிகள் தேடி’எந்தவொரு பாதையிலே சென்றால் நன்று   என்றுதினம் ஏங்குவதே மனதின் தொண்டுபந்தமென்றும் பாசமென்றும் உந்தும் ஆசை   பற்றுவைத்த காரணத்தால் நிறைந்தே சேரவந்துநின்ற பிறப்பினிலே வாட்டம் ஓட்டம்   “வாழ்க்கையெல்லாம் போர்க்களமே”யார்க்கும் இங்கே !நொந்துநூலாய் அந்துவிடும் அச்சம் கொள்ள   நிறைவாக்க வேண்டுமென்று இச்சை கொள்ளபந்துருளும் நிலைபோலே பாதை மாறி   படுந்துன்பம் படுவோர்க்கே தெரியும் என்றும்எந்தசெயல் செய்தாலும் இடையூ ராகி   இன்னலதே முந்திவந்து எதையும் மாற்றும்வந்திருந்த வசந்தமெல்லாம் புயலாய் மாறும்   “வாழ்க்கையெனும் போர்க்களமே” வரவென் றாகும்வருவதெல்லாம் இப்படித்தான் என்றே எண்ணி   வாய்த்ததுதான் வாழ்க்கையென்ற நிறைவே கொண்டுதருவதெல்லாம் தன்மகிழ்வாய் கருதும் போது   தனித்துவந்து சஞ்சலமே தோன்றா தென்றும்தெருவினிலே வாழ்ந்திருப்போர் துன்பம் கண்டு   தேர்ந்திருக்கு நமதுவாழ்க்கை நன்றே என்றுவருந்திடாது இருநிலையும் சமமாய் கொண்டால்   “வாழ்க்கையெல்லாம் போர்க்களமா” இல்லை ! இல்லை !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.