மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வாழ்க்கையெனும் போர்க்களம்: நெருப்பலைப் பாவலர். இராம இளங்கோவன்

Updated On :2 ஜூன் 2018, 12:57 pm

கல்லெடுத்து நா(ர்)உறிப்பார்; 
    காற்றினையும் நஞ்சாக்கிப் 
பொல்லாத செயல்விளைப்பார்; 
    புண்ணில்வேல் பாய்ச்சிடுவார்; 
எல்லோர்க்கும் உள்ளவற்றை 
     எனக்கென்று பறித்திடுவார்; 
வல்லமையால் தீங்கிழைக்க 
     வாழ்வுபோர்க் களமாகும்!

பொதுவான விடியலினைப் 
      பதுக்கிடுவார் தனதென்று; 
மதுவினிலே குடியிருப்பார்; 
       மாண்புகளைக் கற்பழிப்பார்; 
பதுமையெனப் பேசிடாத 
      பாமரரின் உழைப்புறிவார்; 
சதுரங்கக் காய்களாக 
      சாகடிப்பார் நல்வினைகள்! 

இயல்பான இயற்கைவளம் 
      இயன்றவரை திருடிடுவார்; 
செயற்கைகளால் மண்ணுயிரைச்    
       சிதைத்திடுவார்; நலங்கெடுப்பார்; 
வயல்பயிராய்த் தீவினைகள் 
       விளையவைத்து உயிரறுப்பார்; 
பழியாகி  வாழ்க்கையெனும் 
       போர்க்களமாய் மாறிற்றே! 

கல்லாரும் இல்லாரும் 
     செல்வந்தர் அரசியலார் 
பொல்லாரும் உள்ளதனால் 
     எல்லையில்லா வேறுபாட்டில் 
நல்லறத்து வாழ்க்கையெனும் 
      நிலமின்று போர்க்களமாய் 
அல்லலுறும் நிலையதனை 
      அமுதமென மாற்றுவமே! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.