வாழ்கையெனும் போர்க்களம்: அ.வேளாங்கண்ணி

Updated on
1 min read

வாழ்கை யெனும் போர்க்களம்
வாழ்ந்து தான் பார்க்கலாம்
முட்கள் கொண்ட படுக்கையே
முயன்றால் கனவும் காணலாம்

கற்கள் கொண்டு வீசுவோர்
வழி நெடுக நிற்கலாம்
சொற்கள் கொண்டு தாக்குவோர்
வீண் பழியும் சுமத்தலாம்

படைத்தவனும் நம் பக்கம்
திரும்பிப் பார்க்க மறுக்கலாம்
விடை தெரியா கேள்விகள்
பின் தொடர்ந்தே துரத்தலாம்

கஷ்ட மெனும் பெருமழை
அடை மழையாய் பொழியலாம்
இஷ்டம் கொண்ட நபரின்றி
வாழ்வின் பாகம் கழியலாம்

எவருக் கில்லை துன்பமே
கண்ணீ ரில்லா வாழ்க்கையோ
எதிர் நீச்சல் போட்டிட
இன்பம் ஒருநாள் தழுவுமே

தோல்வி கண்டு துவண்டிட்டால்
வெற்றி எப்படி கைவரும்?
துக்கம் விட்டு வராவிட்டால்
பக்கம் வருமோ மகிழ்ச்சியே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com