அலைபாயும் மனதிலே...
நித்தம் நித்தம் ஆயிரம் கேள்விகள்....
அவ்வினாக்களுக்கு, விடைகளோ...
நிழலில் தேடிய நி்ஜமாகி போனது....
எங்கும் எதிலும், குற்றமே நடக்கும் சமூகத்தில்....
நீதியைதேடி அலைய வேண்டியுள்ளது...
யார் இட்ட சாபமோ!...
கருவிலே தொலைந்த குழந்தை போல....
என் கனவுகளும்...என்றும் என்
இதயத்தில் தொலைந்து விடுகின்றன....
அதிர்ஷ்ட தேவதையே!...
நீ ஒருமுறை கண் சிமிட்டினால்...
என் கவலைகள் அனைத்தும்...
நெருப்பின் தாகத்திற்க்கு இட்ட....
இரைபோல் ஆகிவிடும்....
என் இலட்சியம்...நிறைவேறும்...
நாள் எதுவோ...அந்நாளே திருநாள் எனக்கு....
வாழ்க்கையெனும் போர்க்களத்தில்....
போராடும் எனக்கு...."உன்னால் முடியும்"
என்ற நம்பிக்கை சொல்லே....
அனைத்தையும் வெல்ல வைக்கிறது...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.