மிச்சத்தைமீட்போம்: ஆர்.அருண்குமார் 

Updated on
1 min read

பழங்கதை பேசி பாடித் திரிந்தவர்கள்
பாரத பெருமையை மறந்துவிட்டோம்.
புதுமை என்ற பெயரைச் சொல்லி
புரியாத புதிராக மாறிவிட்டோம்.

அரிய புராணங்கள் அறிந்தவர்கள்
அழிவை நோக்கிச் சென்றனர்.
சிறிய நிகழ்வைப் பெரிதாக்கியே
சிந்தையை மாற்றிக்கொண்டோம்.

பெருமைகள் நிறைந்த பூமியில்
பேரிடர் நிறைந்து போனதே.
அருமை தெரியா மானிடர்கள்
அற்புதம் அறியா மூடர்களே.

எத்தனையோ அதிசயங்கள்
எத்தர்களால் அழிந்தன.
பித்தனாக தன்னை மாற்றியே 
பிதற்றத் தொடங்கிவிட்டனரே.   

விந்தை மிகு பூமி வாழவே 
விசித்திரம் போற்றுவோம்.
மிச்சத்தை மீட்டிடுவோம்
மேன்மையைக் காத்திடுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com