மிச்சத்தை மீட்போம்: சரஸ்வதி ராசேந்திரன் 

Updated on
1 min read

விளை நிலத்தை விலை நிலமாக்கியாச்சு
விவசாயத்தை ஒழித்துக் கட்டியாச்சு
தனியார் மயம்  ஊர்கள் மயம்
தாராளமயம்  உலக மயம்னு வந்தாச்சு
பாரம்பரிய பண்புகளை ஓரம் கட்டியாச்சு

துரித உணவுகளை கொண்டு வந்தாச்சு
காவிரி  பொய்த்துப் போயாச்சு
மரங்களை வெட்டியாச்சு
மணலை அள்ளியாச்சு
மரபணு காய்கறிகள் வந்தாச்சு
குழந்தையை தாய் பெத்து செவிலியர் வளர்க்கும்
கலாச்சாரமும் கணிசமா வந்தாச்சு
மருத்துவமும் பொறியலும் காசுக்கு வித்தாச்சு
மனிதாபி மானமும் மரித்துப் போயாச்சு
வல்லரசு ஆகுதோ இல்லையோ நாடு

வலிமையான ஊழல் மயமாச்சு எல்லாமே
உச்சத்துக்குப் போனபின்பு இங்கே
மிச்சமென்ன இருக்குது எச்சத்தைத்தவிர
மச்சமுள்ளவனே மலிந்து (அரசியல் வாதிகள்)
நிற்கையில்
சொச்சம் மிச்சமுள்ள 
மானத்தையாவது மீட்போம் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com