ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மிச்சத்தை மீட்போம்: ஜெயா வெங்கட்

Updated On :18 ஜூன் 2018, 9:53 am
புலரும்   பொழுதோ   புகையில் புதையமலரும் மனிதவாழ்வோ கருவில் கருக தொடர்கிறது இங்கே தொழில்நுட்ப புரட்சி தொலைந்து போனதே இயற்கையின் மலர்ச்சி !காண்பது எல்லாம் கான்கிரீட் காடுகள் காணாமல் போனவை  பசுமைக் காடுகள்விதைக்கும் விதைக்கும்கூட  கையேந்தும் விதியாக  மாறிப்போன    கையறுநிலை !சுகம்என நினைக்கும் இன்றைய தேவைகள் சுமையாகிப் போகுமோ நாளைய தலைமுறைக்கு !அச்சத்தில் வாழ்வதை விடுத்து  இனி மிச்சமிருக்கும் இயற்கையை மீட்டெடுப்போம் வாரீர் !மலையும் மடுவும்    நிலைக்க வேண்டிமரமும் செடியும்  வளர்த்திடுவோம் !மண்ணின் தன்மை காக்க வேண்டி மக்காத   நெகிழிகளைத் தவிர்த்திடுவோம் !புவிவெப்பமும் மாசும் குறைய வேண்டிபுகைவிடும் வண்டிகளுக்குத் தடையிடுவோம் !புல்லும் பூவும் மலர வேண்டி பூமியில் பசுமையான விரித்திடுவோம் !நஞ்சாகிப்போன பஞ்சபூதங்களைக் காத்து எஞ்சியுள்ள மனித குலத்தை தழைக்கச்செய்வோம் !வளமையான   சுற்றுச்சூழலே உலகில் வலிமையான சந்ததியரை உருவாக்கும் என்பதால் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.