மிச்சத்தை மீட்போம்: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read
வழித்துவிட்ட  தலைமொட்டை   போல  நாட்டை            வறட்சியிலே   தள்ளிவிடும்  செயலை  விட்டேஅழித்ததுபோய்   காடுகளில்  மிச்சம்  தன்னை            அடுத்துவரும்  தலைமுறைக்காய்  மீட்ட  ளிப்போம் !குழிபோட்டு  குழிபோட்டுப்  பூமிக்   குள்ளே            குழாய்விட்டே  இருக்கின்ற  நீரெ  டுத்தேவிழிபிதுங்கிச்   சந்ததியர்   தாகத்  தாலே            விக்கியுயிர்  விட்டிடாமல்  மிச்சம்  வைப்போம் !அறிவியலின்  முன்னேற்றம்  என்று  சொல்லி            அதிவிரைவு  வாகனங்கள்  சாலை  ஓட்டிப்பொறிபறக்க   நச்சுபுகை  பரவ  விட்டுப்            பொலிவான   சுற்றுபுறம்   காற்றை   யெல்லாம்வெறியோடு   மாசுசெய்தே   எச்சத்  தார்கள்            வெவ்வேறு  நோய்களிலே  துடிது  டிக்கத்தறிகெட்டுப்  போகாமல்   தூய்மை   காத்துத்            தந்திடுவோம்  இயற்கையினைச்  செம்மை  யாக !மலைகளினை  தகர்த்திட்டோம்  குளங்கள்  ஏரி            மனைகளாக்கி  விற்றுவிட்டோம்  ஆற  ழித்துவிலைபேசி  மணலள்ளி   மலடு  செய்தோம்            விளைநிலத்தில்  சாலைபோட்டு  வாழ்வி  ழந்தோம் !தலைமுறையாய்க்   காத்துவந்த   வளத்தை  யெல்லாம்            தாரைவார்த்துச்  சந்ததியைத்  தவிக்க  விட்டோம்வலைதுடிக்கும்  மீன்கள்போல்   வருங்கா  லந்தாம்            வாய்த்திடாமல்  இயற்கையினை   மீட்போம்  வாரீர் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com