திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒருமுறையேனும்: பெருவை பார்த்தசாரதி

Updated On :25 ஜூன் 2018, 9:58 am
சந்திரனையும் சூரியனையும் தந்தது யார்    சற்றேயொரு முறை யேனும் யோசியுங்கள்.!எந்திர சக்தியை எங்கிருந்(அ)து பெற்றதாம்    எங்கேயோ அந்தரத்திலது தொங்கு தற்கு.!மந்திரத்தால் இயங்க வில்லை தெரிந்துமது    மாயமாய் மறைந்து மீண்டும் திரும்புகிறது.!தந்திரத்தால் அங்கே போகமுடியுமா?நிரந்-    தரமாய் நிலையா யங்கே  தங்கமுடியுமா.?தருகின்ற ஒளியும் தடங்களில்லாக் காற்றும்    தரணியைக் காக்கச் சன்மானம் ஏதுமில்லை.!இருளும் ஒளியும் நீதராது இவ்வுலகுண்டா    இயற்கையே உன்னை என்றும் மதிப்பேன்.!ஒருநாளில் ஒருமுறை யேனும் உன்னை     உறங்கு முன்னே நினைப்பேன் அதன்பின்.!வருகின்ற மற்றை நாட்களில் எல்லாமும்     வாழ்வி லொருவகைப் பிடிப்பு வருமென்றே.!ஒருமுறை தான்பிறவி வேண்டு மதுவும்    உலகுக்குதவி செயும் கிரகங்களைப் போல.!கருவிலே இருக்கும் போதே நாங்களும்    கருணை யுள்ளமுடன் உயிராக வேண்டும்.!இருளிலும் ஒளிதந்து பிரதிபலன் பாராத    உன்னொளியால் நீரிலும் மலர் மலர்கிறது.!உருவிலே சிறிதாய் இருந்தாலும் இப்பரந்த    உலகையே ஆளும் திறமை உனக்குண்டு.!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.