திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒருமுறையேனும்: ​கோ. மன்றவாணன்

Updated On :25 ஜூன் 2018, 9:39 am

அன்பூற்றி, ஆசையிட்டு
ருசிக்க ருசிக்க மனைவி சமைத்த
அமுதுணவை நாவிலிடும் போது
அலுவலகத்தின்
அவசர வேலைகளை
நினைவால் மெல்லுகிறீர்கள்

அலுவலகத்தில்
அதிகப் பணிநெருக்கடியின் போதும்
உடன்பணியாற்றும் எதிராளியின்
உயர்முன்னேற்றத்தை நினைத்து
மனசைச்
மலச்சாக்கடையில் அமிழ்த்துகிறீர்கள்

இலக்கியக் கூட்டத்தில் சுகி.சிவம் பேசும்போதும்
கைப்பேசியில்
விரல் தேய்க்கிறீர்கள்

பஞ்சணையில் மனைவி அரவணைக்கும் போதும்
பள்ளிப் பருவக் காதலை
அசைபோடுகிறீர்கள்

இன்றில் வாழும் போது
நேற்றில்
கால்பதித்து நடக்கிறீர்கள்.

கோவிலுக்குள் சென்று கும்பிடும் போதும்
களவு போகாமல் தப்புமோ என்று
வெளியில் நிறுத்திய வாகனத்தில்

உள்ளத்தை
ஒருமுகப்படுத்துகிறீர்கள்.

வாகனத்தை மிகுவேகத்தில் செலுத்தும்போதும்
மனது பறக்கிறது
வேறு திசைநோக்கி

நிகழ்நேரத்தில்
வாழ்ந்து மகிழ்ந்ததுண்டா
ஒருமுறையேனும்....?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.