அலை பேசி , கை பேசி எதுவும்
இல்லாமல் தனி ஒருவனாய்
என்னை மறந்து, இந்த உலகை
மறந்து , வலையின் மாயையில்
இன்னும் சிக்காத ஒரு மண்ணின்
மடியில் நான் ஆடி ஓடி நடை பயில
வேண்டும் ஒரு நாள் முழுதும் !
அந்த மண்ணின் மரத்தில்
குடியிருக்கும் குயிலின் பாட்டு
பாட்டு மட்டும் கேட்க வேண்டும்
ஒரு நாள் முழுதும் நான் !
இது என் தீராத ஆசை ! என்
ஆசை நிறைவேறுமா என் வாழ் நாளில்
ஒரு முறையேனும் ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.