ஒரு முறையேனும்: கே.நடராஜன்

Updated on
1 min read

அலை பேசி , கை பேசி எதுவும் 
இல்லாமல் தனி ஒருவனாய் 
என்னை மறந்து, இந்த உலகை 
மறந்து , வலையின் மாயையில் 
இன்னும் சிக்காத ஒரு மண்ணின் 
மடியில் நான் ஆடி ஓடி நடை பயில 
வேண்டும் ஒரு நாள் முழுதும் !

அந்த மண்ணின் மரத்தில் 
குடியிருக்கும் குயிலின் பாட்டு 
பாட்டு மட்டும் கேட்க வேண்டும் 
ஒரு நாள் முழுதும் நான் !

இது என் தீராத ஆசை !  என் 
ஆசை நிறைவேறுமா என் வாழ் நாளில் 
ஒரு முறையேனும் ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com