தெய்வமே
தேடித் தேடி அலைகிறோம்
தேடிக் கிடைக்காமல் தவிக்கிறோம்
உன் அருள் தேவையே
உன் கருணைப் பார்வை வேண்டுமே
தமிழனின் உரிமைகள்
தமிழனின் போராட்டங்கள்
தீர்வு கிடைக்குமா....
காய்ந்து போன உள்ளத்தில்
மாய்ந்து போன மனிதனிடத்தில்
சோர்ந்து போன நெஞ்சத்தில்
அயர்ந்து போன எம் குலத்தில்
அமைதி பிறக்க
அற்புதம் நடக்க
ஒரு முறையேனும்
தெய்வமே உன் கண் பார்வை படாதா....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.