ஒருமுறையேனும்: ஆர்.அருண்குமார்

Updated on
1 min read
எத்தனையோ கனவுகள் மனதுக்குள்அத்தனையும் பலிக்கவில்லை.வித்தகனாக வேண்டும் என்றகனவுபித்தனாக அலையவைத்தது.நல்லவனாக வேண்டுமென்ற நனவுமெல்லவே மாறிப்போனது.வல்லவனாக நினைத்தபோதில்சொல்லமுடியா வேதனை தந்தது.நாட்டைத் திருத்த எண்ணிய மனமோ வேட்டை நாயாய்  திரிய வைத்தது.கோட்டை கட்ட போராடியபோதுபோட்ட திட்டமெல்லாம் மறைந்தது.உண்மையைக் கூறினால் உலகமோஅண்மையில் வராதே என்றது.வண்ணமாய் ஒளிர்ந்தபோதுஎண்ணமோ அலைபாய்ந்தது.ஒருமுறையேனும் நினைத்தபடிஉள்ளம் மாறவேண்டும்.மறுமுறையாவது மனமெல்லாம்உறுதுணைபுரிய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com