திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒருமுறையேனும்: பாவலர் இராம இளங்கோவன் 

Updated On :25 ஜூன் 2018, 9:14 am

பிறக்கும்  போது  ஆரம்பித்த 
    பாச  மிகுந்த  அழுகையின்று 
இறக்கும் வரையில் தொடர்கிறதே! 
    இன்னல் வந்து வாட்டியேதான் 
அறமு(ம்)  அற்ற  நிலையினிலே 
    அன்றா  டுந்தான்  வதைக்கிறதே! 
உறவுக   ளெல்லாம்  சூழ்ந்திருக்க 
    ஒருமுறை யேனும்  வாழவேண்டும்! 

உயர்ந்த கல்வி,உயர்பதவி,
    உயர்ந்த செல்வம், நல்மனையாள்,
உயர்ந்த குணத்து நன்மக்கள்,
  உறவுகள் சூழ்ந்து உன்னதத்து 
இயற்கை போன்ற இயல்பான 
   இன்பம்  நிறைந்த வாழ்க்கையினை 
இயல்பாய் இனியொரு முறையேனும் 
   இப்புவி தன்னில் வாழவேண்டும்! 

இன்பத் தமிழின் சீர்கலைகள்,
   இன்பத் தமிழின் இலக்கணங்கள், 
இன்பத் தமிழின் இலக்கியங்கள், 
    எல்லாம் முழுதும் கற்றுயர்ந்து, 
இன்பத் தமிழின் பண்பாட்டில்
    இன்பத் தமிழின்அடையாளம் 
என்றும் காத்து உண்மையாக 
   ஒருமுறை யேனும் வாழவேண்டும்! 

வள்ளல் குணமும் வழிந்திடாத 
    வளம்நி றைந்த நெஞ்சமுடன் 
அள்ள அள்ளக் குறைந்திடாத 
    ஆற்றல் பெற்று நல்வினைகள் 
உள்ளந் தோறும் விதைக்கின்ற 
   ஊக்கமும் ஆக்கமும் உடையவனாய் 
கள்ள மின்றி வாழவேண்டும்;
   கோலோச் சியொரு முறையேனும்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.