ஒருமுறையேனும்: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read
தண்ணீரே  வாராதத்  தெருக்கு  ழாய்கள்            தாரின்றிக்  கல்குத்தும்  வீதிச்  சாலைமண்சேறாய்ச்  சாக்கடைநீர்  தேங்கும்  முற்றம்            மறந்துமொளி  வீசாத   மின்கம்  பங்கள்கண்மறைக்கும்   ஆளுயர   விளம்ப  ரங்கள்            காட்சிதரா  ஆட்சியாளர்  என்றே  நாளும்எண்ணற்ற  பிரச்சனைகள்   எதிரில்  நிற்க            எவரேனும்  கேட்பதற்கு  வந்த  துண்டா !இயற்கையினை   அழிக்கின்றார் !  சுற்றுச்  சூழல்            இனியகாற்றை   மாசாக்கிக்  கெடுக்கின்  றார்கள்வயல்ஏரி  குளங்களினை  விற்கின்  றார்கள்            வளம்தந்த  ஆற்றுமணல்  அள்ளு  கின்றார்அயல்மொழியில்  கல்விதந்து  வணிக  மாக்கி            அன்னைமொழி   தமிழ்மொழியை  ஒதுக்கு  கின்றார்செயல்பட்டே   இவைகளினைத்  தடுப்ப  தற்குச்            செழுந்தோளார்  எவரேனும்  வந்த  துண்டா !அரசியலார்  செய்கின்ற  தவற்றைக்  கேட்க            அரசாங்க   அலுவலர்கள்   கையூட்   டோட்டக்குரலெடுத்து   முழக்கமிட்டே   ஒருவ   ரேனும்            கூடிடுவோம்  ஒற்றுமையாய்  என்ற  துண்டாவிரல்நீட்டிக்   கயவரினைச்  சுட்டி  நீங்கள்            விரட்டுதற்கே   ஒருமுறைதாம்  எழுந்து  விட்டால்வரலாற்றை   மாற்றிடலாம் !  தூய  ஆட்சி            வளவாழ்வு   இங்கமையும்  வாரீர்  வாரீர் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com