மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

யார் இட்ட சாபம்: அழகூர். அருண். ஞானசேகரன்

Updated On :21 மே 2018, 9:57 am
யார்யிட்ட சாபத்தால் பண்பில்லா மோடியவன்               இன்னாட்டை ஆளவந்தான்;      ஏற்றுமதி சரிந்ததே தொடர்ந்துமூன் றாண்டாக               என்னபதில் தனைசொல்லுவான்?பார்யிதனை ஆளவரும் வேந்தற்கு சிறிதேனும்               பண்புகள் வேண்டும்தானே,      பண்பற்றத் தலைவனால் நேர்ந்திடும் அவலமதைப்               பார்ப்பதும் கொடுமைதானே!கூர்கெட்ட மதியாளன் நாடாளும் வரைதன்னில்               கொடுமைகள் தொடர்ந்திடாதோ;       குறையாதோ வளங்களும் புகழதும் பெருமையும்                கொடுமையிதைப் பொறுக்கத்தகுமோ?சீர்மிக்க அறிஞரென் றாகாத போதினில்               சிறப்பாக ஆளத்தகுமோ?       சிந்தித்து வாக்குதனை நாமிடாப் போதினில்               சிறப்புதனைக் காணத்தகுமோ?பணத்தாள் மதிப்பிழக்க பாழ்பட்டது தொழிலும்        பாண்டித்யம் இல்லாரின் பண்பற்ற செயலால்!கணக்கெலாம் தவறாச்சு காணபவர் நகைக்க        காலமிதை மறக்காது கருத்திலிதைக் கொள்க!சுணக்கமின்றி உலகமதை சுற்றிவரும் மோடி       சுழியமதைப் பலனாக பெற்றதே உண்மை!இணக்கமற்ற செயலாலே இழிவேதான் பலனாம்,       யாரிட்ட சாபமதால் இவனாட்சி பெற்றோம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.