யார் இட்ட சாபம்:  கு.முருகேசன்

Updated on
1 min read
பூமியை சூரியன் சுட்டெரிப்பதும்புழுதிப்புயல் உயிர்களைசூறையாடுவதும்!யார் இட்ட சாபத்தால்?காவிரிப் பிரச்சனை சவ்வாய் இழுப்பதும்!காவிரி நீர் கேட்ட விவசாயிக்குகானல் நீர் வருவதும்யாரிட்ட சாபத்தால்?ஓடிஓடி உழைப்பவன் ஓடாய்த் தேய்வதும்!ஒய்யாரமாய் உட்கார்ந்தே உண்பவன்ஊளைச் சதைப் பெருகுவதும்!யார் இட்ட சாபமோ?25 க்கு மேல் நீட் தேர்வு எழுதக்கூடாதுஎன்பது அரசு இட்ட  சட்டம்!2000 கிமீ தாண்டி எழுதவேண்டும் என்பதுயாரிட்ட சாபம்?கோயில் கருவறையில்குழ்ந்தையை கற்பழிக்கும்கயவர்கள் பெருகுவதுயார் இட்ட சாபமோ?முதியோர் இல்லங்களிலிருந்துமுதியோர் இல்லம் செல்வதும்!ஊருக்கு சோறுபோடுபவன் பட்டினி கிடப்பதும்!யாரிட்ட சாபத்தால்?உழவனின் வாழ்கையில்வறுமைக் கோடும் வயிற்றில் கோடும்மாறாமல் இருப்பதும்யாரிட்ட சாபத்தால்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com