திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 3

பிரமன், சிவன், இந்திரன்

News image
Updated On :28 அக்டோபர் 2018, 12:00 am IST

பாடல் 3

கூவிக்கொள்ளாய் வந்து, அந்தோ, என் பொல்லாக் கருமாணிக்கமே,
ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான்,
மேவித் தொழும் பிரமன், சிவன், இந்திரன் ஆதிக்கு எல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே, உம்பர் அந்த அதுவே.

பொருந்தித் தொழுகின்ற பிரமன், சிவன், இந்திரன் முதலானோருக்கெல்லாம் தொடக்கமாக அமையும் திருநாபிக்கமலத்துக்கு இடமானவனே, வானவர்களுக்கும் அதே தன்மையாக அமைந்தவனே, என்னுடைய உயிருக்கு உன்னைத்தவிர இன்னொரு பற்றுக்கொம்பை நான் அறியேன், எம்பெருமானே, என்னுடைய துளையிடப்படாத கருமாணிக்கமே, இங்கே வந்து என்னைக் கூவிக்கொள்ளமாட்டாயா, அடடா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.