உயர்ந்தேன் மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர் தலை காவல் இலாமையினால்
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தே என் வயிற்றின் அகம்படியே பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட நான்
அயர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">வயந்தே = வயப்பட்டு (அருளின்)</p><p align="JUSTIFY">ஒண்பொருள் = நல்ல வழியில் பெற்ற செல்வம்</p><p align="JUSTIFY">திருநாவுக்கரசு நாயனார், மனை வாழ்க்கையில் ஈடுபட்டதாக குறிப்பு ஏதும் பெரிய புராணத்தில் காணப்படவில்லை. மேலும், சிறிய வயதில் சமண சமயம் சார்ந்து துறவியான நிலைதான் குறிப்பிடப்படுகிறது. எனவே, அவர் மனை வாழ்க்கையில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், சமண சமயத்தைச் சார்ந்த பின்னர் பல சமண சமய நூல்களை நன்கு கற்றுத் தேர்ந்து, பிற மதத்தவருடன் வாதங்கள் புரிந்து, அவர்களைத் தனது வாதத்தால் வென்று புகழ்பெற்றதாக அவரது சரித்திரத்திலிருந்து நாம் அறிகிறோம்.</p><p align="JUSTIFY">இறைவனைப் பற்றிய சிந்தனை தோன்றாத காலங்களில், மனை வாழ்க்கை, நாம் ஈட்டும் செல்வம், நாம் பெற்ற புகழ் இவை அனைத்தையும் பெரிய பேறாக நாம் நினைத்து மகிழ்கிறோம். அதனால் செருக்கும் அடைகிறோம். ஆனால், இறையுணர்வு ஏற்படும் சமயங்களில், இறைவனைவிட உயர்ந்த செல்வமோ, அவனது புகழைவிட உயர்ந்த புகழோ ஏதும் இல்லை என்பதை நாம் உணர்கிறோம். சிவபிரானை வணங்காமல் சமண சமயத்தில் தான் பெற்ற புகழைப் பெரிதாகக் கருதி வாழ்ந்த வாழ்க்கைக்கு அப்பர் பிரான் இங்கே வருத்தம் தெரிவிக்கிறார் என்றே நாம் பொருள் கொள்ள வேண்டும்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">கெடில நதிக்கரையில் உள்ள திருவதிகை வீரட்டானத்தில் உறையும் சிவபெருமானே, என்னை சரியாக வழி நடுத்துபவர் எவரும் இல்லாததால், மனை வாழ்க்கை, செல்வம், புகழ் இவற்றைப் பெரிதாக மதித்தேன். உமது அருள்வயப்பட்ட நான், வாழ்க்கையின் இன்பம், செல்வம் மற்றும் புகழ் அனைத்தும் உமது பெருமையின் முன்னே வெறுமை என்பதை உணர்ந்துவிட்டேன். எனவே, உமக்கு அடிமையாக வாழ்வது என்ற முடிவில் இருக்கும் என்னை, கொடிய சூலை நோய் என்னை மிகவும் வருத்துகிறது. எனது குடலுக்குள் புகுந்து, புரட்டியும் அறுத்தும், என்னைப் பல வகையில் துன்புறுத்தும் இந்த சூலை நோயால் நான் மிகவும் அஞ்சி தளர்ந்துவிட்டேன். நீர்தான் இந்த சூலை நோயினை தவிர்த்து அருள வேண்டும்.</p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காலை சிற்றுண்டி திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும்: எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி.

கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்
தினப்பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

